Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? நிதித் துறை செயலர் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தில் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு மருத்துவச் செலவுத் தொகையைத் திரும்ப வழங்கும் உத்தரவை நிதித் துறை செயலர் நிறைவேற்றாததற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரி வித்துள்ளது.

மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:

தமிழக அரசின் புதிய மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப் பினராக உள்ளேன். மருத்துவக் காப்பீட்டுக்காக எனது சம்பளத்தில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. 2018-ல் பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதற்கு ரூ.1.22 லட்சம் செலவானது. இத்தொகையை மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் திரும்பக் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் மருத் துவமனைகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறி மருத் துவச் செலவுத் தொகை வழங்க மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் எனக்கு மருத்துவச் செலவுத் தொகை வழங்க 2019-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை பணம் வழங்கப்பட வில்லை.

எனவே நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றாத நிதித் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், மருத்துவச் செலவுத் தொகையை திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக் கறிஞர் என்.இளங்கோ வாதிட்டார்.

பின்னர் நீதிபதி தனது உத்தரவில், இந்த வழக்கில் நிதித் துறை (சம்பளங்கள்) செயலர் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் நேரிலோ, காணொலி காட்சி வழியாகவோ ஆஜராகவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி மனு தாரருக்கு மருத்துவச் செலவுத் தொகையை வழங்கவும் இல்லை. இதனால் நிதித் துறை செயலர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு அவர் 15 நாளில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-க்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x