Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM
இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். அதன்பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சேர்ந்து விடும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சியில் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டியில் சென்று பொதுமக்களிடம் மனு வாங்கும் திட்டத்தை கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிரிக்கெட்டில் செஞ்சுரி அடித்ததும் பேட்டை தூக்கிக் காட்டுவர். அதுபோல பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால் பிரதமர், நிதியமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் பேட்டை தூக்கி காட்ட வேண்டியதுதான். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான முடிவுகள்தான் காரணம்.
இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். அதன்பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சேர்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT