Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸார் உயிரிழப்பு

 நகர்

ஜம்மு காஷ்மீரில் நேற்று 3 என்கவுன்ட்டர் சம்பவங்களில் 3 போலீஸார், 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

 நகரில் பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய சாலையில் பகத் என்ற பகுதி உள்ளது. இங்கு 2 போலீஸாரை தீவிரவாதிகள் மிக அருகிலிருந்து சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த போலீஸார் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு இருவரும் உயிரிழந்தனர்.

இறந்த காவலர்கள் இவரும் சோகைல், முகம்மது யூசூப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தப்பியோடிய தீவிரவாதிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

 நகரில் பாதுகாப்பு மிகுந்த துர்காநாக் பகுதியில் கடந்த புதன்கிழமை ஓட்டல் உரிமையாளர் ஒருவரின் மகனை தீவிரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர். இந்நிலையில் 3 நாட்களில் இரண்டாவது தாக்குதலாக நேற்று 2 போலீஸாரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக 3 தீவிரவாதிகள் நேற்று பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் ஐஜி விஜய்குமார் கூறும்போது, “ஷோபியான்மாவட்டத்தில் அல்-பாதர் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு சுற்றிவளைக்கப்பட்டனர். இவர்கள்மறுநாள் காலையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்” என்றார்.

காஷ்மீரில் மூன்றாவது சம்பவமாக, பட்காம் மாவட்டம், பீர்வா கிராமத்தில் 2 தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 2 போலீஸார் காயம் அடைந்தனர். இதில் அல்டாப் அகமது என்ற காவலர் பின்னர் உயிரிழந்தார். தப்பியோடிய தீவிரவாதிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x