Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆனது.

இந்நிலையில், வெடி விபத்தில் 45 சதவீத தீக்காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் அருகே உள்ள படந்தாலைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மனைவி வைஜெயந்தி மாலா (30) நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x