Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூரில் செளத் இந்தியன் வங்கியின் கிளை அலுவலகம் அருகில் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை ‘காஸ் கட்டர்’ மூலம் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏடிஎம் இயந்திரம் தீப் பற்றியுள்ளது. இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தீப் பற்றி எரிவதை பொதுமக்கள் பார்த்து அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு கருவி உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x