Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
கோவை: கோவை சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை வேடர் காலனி பகுதியில், புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். கடந்த 2009 அக்டோபர் 28-ம் தேதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது. இது தொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தியதில், வாழை மரங்களுக்கு யானைகள் சேதம் விளைவிப்பதைத் தடுக்க, வீட்டு மின் இணைப்பைக் கொண்டு, நேரடியாக வேலியில் மின்சாரத்தை செலுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அங்கு விவசாயம் செய்துவந்த அம்மாசை (82), அவரது மகன்கள் கோவிந்தராஜ் (55), கனகராஜ் (58) ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர். பின்னர், அம்மாசை உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கு கோவை மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பழனி, குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தராஜ், கனகராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT