Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

நிலக்கோட்டை அருகே பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரதிதேவி (38). ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளர். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குரும்பபட்டியைச் சேர்ந்த சுரேஷ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரதிதேவியுடன் இருந்த தொடர்பைவிட சுரேஷ் முடிவு செய்தார். அதற்கு ரதிதேவி மறுத்தார். இதுகுறித்து பேச முடிவு செய்த சுரேஷ், ரதிதேவியை வைகை அணைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெறியப்பநாயக்கன்பட்டி அருகே சென்றபோது ரதிதேவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு சுரேஷ் தப்பினார். படுகாயமடைந்த ரதிதேவியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

இந்நிலையில், சுரேஷ் குரும்பபட்டி கண்மாயில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நிலக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x