Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு

சென்னையில் நேற்று சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில், மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.பெஞ்சமின், கே.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், பாஜக சார்பிலும் சிங்காரவேலர் பிறந்த தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அதில் பங்கேற்ற குஷ்பு, அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x