Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள் பதிவு மேற்கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக, முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, 65 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடலாம். விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களது படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அசல் ஆவணங்களுடன், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, பதிவு செய்து கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x