Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு சென்னையில் இலவச பயிற்சி

சென்னையில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக வடசென்னை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குருப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வர இருக்கிறது. இதன்மூலம் 2000-த்துக்கும் அதிகமாக காலியிடங்கள் நிரப்பப்படலாம். இத்தேர்வுக்கு அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகியவை இணைந்து முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு பாடத்திட்டங்களை இணைத்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

இப்பயிற்சி பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான வகுப்புகள் பிப்ரவரி 21-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் 63698 74318, 94446 41712, 70920 95474 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x