Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் முறையே பிப்.19, பிப்.25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் பிப். 25-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டங்களில் விவசாயிகள் முகக்கவசத்துடன் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x