Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM
ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. சொக்கர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியர்கள் செய்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இம்மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT