Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய மேலாளர் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரை ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலாளராக இருப்பவர் பாலதண்டாயுதபாணி. இவரிடம் ஊராட்சித் தலைவர் ஒருவர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அந்த ஊராட்சித் தலைவர் ஆட்சியரிடமும் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விசாரணை செய்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாலதண்டாயுதபாணியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x