Published : 18 Feb 2021 03:20 AM
Last Updated : 18 Feb 2021 03:20 AM

புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,879-ஆக உயர்ந்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,675-ஆக உயர்ந் துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 19,441 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x