Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
பெங்களூருவில் உள்ள பொம்மன ஹள்ளியில் எஸ்எஸ்என் ராஜ்லேக்வியூ அடுக்குமாடி குடிருப்பு உள்ளது. இங்குள்ள 399 வீடுகளில் 1500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் இந்த குடியிருப்பில் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 11-ம்தேதி இந்த குடியிருப்பை சேர்ந்தசிலர் டேராடூனுக்கு சுற்றுலாசெல்வதற்கு முன் கரோனாபரிசோதனை செய்துகொண்ட போது 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 12-ம் தேதி பரிசோதித்தபோது மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அறிந்த பெங் களூரு மாநகராட்சி அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 1,190 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறும்போது, “கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்ட 105 பேரும்விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து கரோனாபரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் அற்ற கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. அனைவரும் தொடர்ந்து மருத் துவ கண்காணிப்பில் வைக் கப்பட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT