Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க அரசு நிதியுதவி: நூலாசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க தமிழக அரசு வழங்கும் நிதியுதவியை பெற விரும்பும் நூலாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்தின்கீழ், பயன்பெற விரும்பும் நூலாசிரியர்கள், `உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 28 என்ற முகவரியில் வரும் 26 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x