Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

புகையிலை பொருள் கடத்திய இருவர் கைது

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுன்ட் பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட 531 பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன. காரில் இருந்த கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன்(48), மெஜில் ராஜ்(42) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், குட்கா, புகையிலையை விற்பனை செய்ய கடத்திச்சென்றதாக தெரி வித்தனர்.

இருவரையும் கைது செய்த போலீஸார் குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x