Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியின் 12, 20, 21-வது வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதாகி இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், இப்பகுதிகளில் சாலை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. இதையடுத்து 20-வது வார்டு பகுதிக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் நேற்று பொதுமக்களுடன் போராட்டம் நடத்தப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஆஸ்டின் எம்எல்ஏ, மாநகர திமுக செயலாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் சாலைகளை சீரமைக்க கோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து ஆஸ்டின் எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலைப் பணிகள் தொடங்குவதாக அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT