Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
ஆந்திராவில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுவரை 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆதரவாளர்களும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர்களும் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, 75 நகராட்சிகள், 12 மாநகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்து வட்டாரங்களுக்கு வரும் மார்ச் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT