Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடமும் ‘வலிமை’ படம் குறித்து அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதுசமூக வலைதளத்தில் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளம் வழியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி மட்டுமின்றி, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களிடமும், ‘வலிமை அப்டேட் என்ன’ என்பது போல சில ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீதும், என் படங்கள் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக, நான் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் சம்பந்தப்பட்ட அப்டேட்கள் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு துறையினரிடம் என் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்துவரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கின்றன. முன் னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும்.அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். பொறுமையுடன் காத்திருக்கவும்.
உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும்சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.
இதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியம்,கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT