Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,861-ஆகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,670-ஆகவும் அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,614-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்த நிலையில், முதன் முறையாக நேற்று பாதிப்பு பதிவாகாத மாவட்டமாக இருந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x