Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்துக்கு 2.7 சதவீத வட்டி வழங்க உத்தரவு

நடப்பு நிதியாண்டுக்கு முன்கூட்டியே மின்கட்டணம் செலுத்துவோருக்கு, 2.7 சதவீதம் வட்டி வழங்க மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கிறது. கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். தாமதமாக கட்டினால் அபராதம் விதிக்கப்படும். அல்லது, மின்இணைப்பு துண்டிக்கப்படும்.

வெளியூரில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு மின்இணைப்பை துண்டிப்பதை தவிர்க்கும் வகையில், தங்களுக்கான மின்கட்டணத் தொகையை, உத்தேச அடிப்படையில் முன்கூட்டியே மின்வாரியத்தில் செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்தப்படும் மின்கட்டணத்துக்கு மின்வாரியம் வட்டி வழங்கும். இந்த வட்டியை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும். வரும் நிதியாண்டுக்கான வட்டியாக 2.7 சதவீதத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்து மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x