Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM
நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில் வருமாறு:
பற்றாக்குறையான நிதி ஒதுக்கீடு, தவறான திசையில் நிதி ஒதுக்கீடு ஆகியவையே ரயில் பயண பாதுகாப்பின்மைக்கு காரணமாக அமைகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ரயில் பயண பாதுகாப்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். ரயில் விபத்தில் பயணி உயிரிழப்பு கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்தில் பயணி உயிரிழப்பு எதுவும் இல்லை.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT