Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

22 மாதங்களில் ரயில் விபத்துகளில் உயிரிழப்பு இல்லை

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில் வருமாறு:

பற்றாக்குறையான நிதி ஒதுக்கீடு, தவறான திசையில் நிதி ஒதுக்கீடு ஆகியவையே ரயில் பயண பாதுகாப்பின்மைக்கு காரணமாக அமைகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ரயில் பயண பாதுகாப்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். ரயில் விபத்தில் பயணி உயிரிழப்பு கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்தில் பயணி உயிரிழப்பு எதுவும் இல்லை.

இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x