Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

9, 10-ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு

தமிழக அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு தினமும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குவழக்கம்போல் மதிய நேரங்களில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 9-ம் வகுப்புபடிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம்மாணவர்களுக்கும் 10-ம் வகுப்புபடிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கும் என மொத்தம் 5 லட்சம் பேருக்கு தினமும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x