Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
கோவை: மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அளித்த புகாரின்பேரில், சென்னையைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் (59), மேட்டுப்பாளையம் காட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (49) ஆகியோரை கடந்த ஜனவரி 31-ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இருவரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சக்திவேல், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT