Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்றுகாரணமாக பள்ளிகள் கடந்தமார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தன. தொற்று தற்போது தணிந்துள்ள சூழலில் 10,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜன.19-ம் தேதி முதல் பள்ளி களைத் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 9, 11-ம் வகுப்புகளுக்கு இன்று(பிப்.8) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாகபாடத்திட்டம் 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. இதற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளில் பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி பெரும்பாலான பாடங்களுக்குவினாத்தாள் தயாரிப்பு நிறைவுபெற்றுவிட்டது. மீதமுள்ள பாடங் களுக்கு வினாத்தாள் தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வடிவமைக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து இறுதி வினாத்தாள் தேர்வு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x