Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

அரசுப் பள்ளிகளுக்கான விளையாட்டு மானியம் ரூ.18.94 கோடி நிதி ஒதுக்கீடு பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.18.94கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில், மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனைமேம்படுத்துவதற்காக உடற்கல்வி மானியம் வழங்கப்படு கிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான ரூ.18.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தொடக்கப் பள்ளிக்கு ரூ.5,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ.10,000, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிக்குரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய உபகரணங்களின் பட்டியல் மற்றும்வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள் ளன.

இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிகளின் வளாக உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான விளையாட்டு உபகரணங்களை வாங்க வேண்டும்.பாரம்பரிய, வட்டார விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தப் பணிகளை பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பேற்று மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x