Published : 08 Feb 2021 03:11 AM
Last Updated : 08 Feb 2021 03:11 AM

கோயில் உண்டியல் திருட்டு

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கடாரங் கொண்டான் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேற்று காலை பூசாரி சென்றபோது, கோயிலில் இருந்த உண்டியல் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், அண்மை யில் 3 பேர் காணிக்கையாக செலுத்திய தங்க மாங்கல்யம் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x