Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

வட மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும்

சென்னை

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 10-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் காலை நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசானபனி மூட்டம் ஏற்படக் கூடும்.

9-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.எனவே மீனவர்கள் அப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x