Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
கோவை: கோவை விளாமரத்தூர் பகுதியில், வனப் பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிக்காட்டுப் பகுதியில் புகுந்த சிறுத்தை, செல்வி என்பவர் வளர்த்துவரும் 4 வயது வெள்ளாட்டை நேற்றுமுன்தினம் மாலை பிடித்து, சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அதைப் பார்த்து மக்கள் சப்தம் போட்டதால் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு, சிறுத்தை ஓடிவிட்டது. ஆட்டின் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன. மேட்டுப்பாளையம் வனத் துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT