Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ்.இ. இயக்குநர் ஆகியோருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14-ம் தேதி ரம்ஜான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் பிறை தென்படுவதைப் பொறுத்து ரம்ஜான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்புள்ளது. இதை கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது.
ரம்ஜான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை இப்போதே மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT