Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

புதிதாக 489 பேருக்கு தொற்று தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 4,446 பேர்

தமிழகத்தில் புதிதாக 489 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 282, பெண்கள் 207 என மொத்தம் 489 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 158 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 40,849 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 24,024 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 506 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

4 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட4 பேர் நேற்று உயிரிழந்தனர்.இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,113 பேர் இறந்துள்ளனர்.

254 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 81,457 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் 52,656 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x