Published : 05 Feb 2021 03:15 AM
Last Updated : 05 Feb 2021 03:15 AM
இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அப்பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் தகவல்களைப் பெறுவது அடிப்படை உரிமை என்றும் அமெரிக்க நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையின் செயல்பாடுகளை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்றுள்ள அமெரிக்க நிர்வாகம், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மிகச் சரியான முடிவு என சுட்டிக்காட்டியுள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் ஜனநாயக மரபு என்றும் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT