Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
புதுடெல்லி: ஜிஎஸ்டி காரணமாக மாநிலங்கள் சந்திக்கிற வரி வருவாய் இழப்பை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால், சிறப்பு சாளர முறையில் கடனாக பெற்று தவணை அடிப்படையில் (வாரம் ரூ.6 ஆயிரம் கோடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. மொத்தம் ரூ.1.10 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது.
இதன்படி, 14-வது தவணை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதன் மூலம் இதுவரை ரூ.84,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த இழப்பீட்டு தொகையில் 76 சதவீதம் என நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதில் மாநிலங்களுக்கு ரூ.76,616.16 கோடியும் 3 யூனியன் பிரேதசங்களுக்கு ரூ.7,383.84 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி காரணமாக வரி வருவாய் இழப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளன. இவை தவிர பிற மாநிலங்கள், யூனியன் பிரேதசங்கள் சிறப்பு சாளர முறையில் இழப்பீட்டை கடனாகப் பெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT