Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
பெண்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை 2 பெண்கள் தொடங்கியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுருதி ராவத், பிஹாரைச் சேர்ந்த சவிதா மக்தவ் ஆகியோர் இந்தப் பயணத்தைத் தொடங்கி உள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தி இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சுருதி ராவத் கூறும்போது, “சமுதாயத்தில் பெண்களுக்கு சுய அதிகாரம் வழங்குதல், தூய்மையான இமய மலையைப் பராமரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். வாகா எல்லையிலிருந்து உத்தராகண்ட் மாநிலம் வரை 8 மாநிலங்கள் வழியாக இந்த சைக்கிள் பயணம் நடைபெறும்.
இந்த 5 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்துக்கு உத்தராகண்ட் மாநில அரசு எங்களுக்கு உதவுகிறது. பயணம் உத்தராகண்டில் நிறைவுறும்” என்றார்.
சவிதா மக்தவ் கூறும்போது, “தூய்மையான சுற்றுச்சூழல், மாசுஇல்லாத உலகம் வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக செல்லும் வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்றுவிழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” என்றார். இந்த சைக்கிள் பயணத்தை அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில், பிஎஸ்எப் டிஜிபி பூபிந்தர் சிங் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT