Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் ரூ.180 கோடி

தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(டிஎம்பி) டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ. 180.81 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.120.78கோடியாகும்.

டிசம்பருடன் முடிவடைந்த 9மாதங்களில் வங்கி ஈட்டிய லாபம்ரூ.422.35 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.243.49 கோடியாகஇருந்தது. கரோனா தொற்று காலத்திலும் வங்கியின் லாபம் அதிக அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகளையும்,48 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டு வங்கி செயல்பட்டு வருகிறது.

டிசம்பருடன் முடிவடைந்த 9 மாதங்களில் வங்கியின் மொத்தவைப்புத் தொகை ரூ.37,888 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.35,174 கோடியாக இருந்தது. தற்போது இதில் 7.72 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

9 மாதங்களில் வழங்கிய கடன் தொகை ரூ. 30,212 கோடியாகும். மொத்த வர்த்தகம் ரூ.68,101 கோடியாகும். சேமிப்பு மூலமான தொகை ரூ.10,392 கோடியாகும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, வீடு கட்டுதல்போன்றவற்றுக்கும், விவசாயத்துக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடன் தொகையில் இவற்றுக்கான ஒதுக்கீடு 76.57 சதவீதமாகும். முன்னுரிமை கடன் தொகை ரூ.21,163 கோடியாகும். விவசாயத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகைரூ.7,812 கோடி. மொத்த கடன் ஒதுக்கீட்டில் விவசாயத்துக்கான கடன் ஒதுக்கீடு 25.86 சதவீதமாகும்.

சிறு, குறுந் தொழில் துறைக்குரூ.11,894 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் நிகர சொத்துமதிப்பு ரூ.587 கோடி அதிகரித்து ரூ. 4,404 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வாராக் கடன் 3.24 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா காலத்தில் வாடிக்கையாளரின் வசதிக்காக வாட்ஸ்அப் வங்கி சேவையை வங்கி செயல் படுத்தியுள்ளது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x