Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில்நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை (4-ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின் பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெறவுள்ளன. இதனால், அங்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனால், நாளை ஒருநாள் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x