Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்பழநி மலைக்கோயிலில் முடிகாணிக்கை

பழநி: இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த அணியில் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இடம் பெற்றிருந்தார். இவரது பந்து வீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சுற்றுப் பயணம் முடிந்து தமிழகம் திரும்பிய இவர், தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழநி வந்தார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு நேர்த்திக் கடனாக பழநி மலைக் கோயில் அடிவாரத்தில் முடிகாணிக்கை செலுத்தினார். பின்னர் ரோப் கார் மூலம் மலைக் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ரோப் கார் நிலையத்தில் நடராஜனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x