Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM

தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 509 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 309, பெண்கள் 200 என மொத்தம் 509 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 148 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 37,327 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 25,325 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 20,381 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 169 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 531 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 4,601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,345 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,097 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 30,982,கோவையில் 54,282, செங்கல்பட்டில் 51,457, திருவள்ளூரில் 43,514 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.தமிழகத்தில் 253 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 13,194 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

நேற்று மட்டும் 52,520பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x