Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

தென் மாவட்டங்களில்அடுத்த 4 நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்பு

அடுத்து வரும் 4 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் கூறியதாவது:

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்து வரும்4 நாட்களுக்கு தென் தமிழகமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x