Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
அண்ணாவின் 52-வது நினைவு தினமான பிப்.3-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT