Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே பெருமாநல்லூரை அடுத்த ராக்கியபட்டியைச் சேர்ந்தவர் எம்.ராகுல்குமார் (20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 43 பேர் கொண்ட குழுவினருடன் பழநிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு திருப்பூர் - தாராபுரம் சலையில் குண்டம் காவல் எல்லைக்கு உட்பட்ட இடையன்கிணறு பகுதி தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கட்டுப்பாட்டை இழந்து ராகுல்குமார் மீது மோதினார்.

ராகுல்குமார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த குண்டடம் இந்திரா நகரைச் சேர்ந்த எஸ்.முத்து(23) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், சிகிச்சைபலனின்றி இருவரும் உயிரிழந்தனர். குண்டடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x