Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

செங்கல்பட்டு தடத்தில் 10 மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து

சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் இருக்கும் செங்கல்பட்டு யார்டில் இன்று காலை 10.45 மணி முதல் 1.10 மணி வரையிலும், நாளை காலை 10.20 மணி முதல் 1.35 மணி வரையிலும் மேம்பாட்டு பணிகள் பெறவுள்ளன. இதனால், மேற்கண்ட நேரங்களில் 10 மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 9.32 மணி, 10.08, 10.56, 11.48, மதியம் 12.15 மணி மின்சார ரயில்களின் சேவையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஒரு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், 30-ம் தேதியில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு காலை 10.55 மணி மற்றும் 29, 30-ம் தேதிகளில் காலை 11.30, மதியம் 12.20, மதியம் 1, 1.50 மணி ரயில்களின் சேவையில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ஒரு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில் மேற்கண்ட நாட்களில் திருமால்பூரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு வரும் வரையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x