Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
புதுவையில் தைப்பூச விழாவை யொட்டி பக்தர்கள் காவடி ஏந்திதீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத் தினர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. புதுவை செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ள சீர் செல்வமுருகன் கோயி லில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. எங்கும் இல்லாத வகையில் தைப்பூச நாளில் பக்தர்கள் தீ மிதிக்கும் விசேஷம் இங்கு நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பலரும் காவடி ஏந்தி அலகு குத்தி வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் புதுவை மற்றும் தமிழக கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மிளகாய் அபிஷேகம்
புதுவை அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கிருந்த சாமியாருக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்கள் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து அதனை கொண்டு சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT