Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

மதுரை சிறு தொழில் முனைவோர் வசதிக்காக 6 விரைவு ரயில்களில் பார்சல்களுக்கு அனுமதி

ரயில்களில் சிறிய பார்சல்கள் அனுப்பும் வசதி நடைமுறையில் உள்ளது. சிறு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருட்களை அனுப்புவதற்கு வசதியாக மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 விரைவு சிறப்பு ரயில்களுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் ஐந்து நிமிடங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(வண்டி எண் 02662) செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில், (வண்டி எண் 06235) தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் ஆகியவை விருதுநகர் ரயில் நிலையத்திலும், (வண்டி எண் 06182 ) செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்திலும், (வண்டி எண் 02694) தூத்துக்குடி-சென்னை எழும்பூர் முத்து நகர் சிறப்பு ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும், (வண்டி எண் 06724) கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், (வண்டி எண் 02652) பாலக்காடு-சென்னை சென்ட்ரல் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்திலும் ஐந்து நிமிடங்கள் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x