Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

குழந்தை திருமண வழக்கில்3 பேருக்கு சிறை தண்டனை

மதுரை செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த வர் பழனி(57), இவரது மகன் ஜெய பாண்டி(31). கடந்த 2012-ல் சம்மட்டிபுரம் ராஜ்நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஜெயபாண்டிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இது தொடர்பாக செல்லூர் போலீஸார் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனி, ஜெயபாண்டி, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்றது.

விசாரணை முடிந்த நிலையில் 3 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x