Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் கனிமொழி பிரச்சாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயலில் இன்று (ஜன.29) காலை 9 மணிக்கு விவசாயிகள், சுய உதவிக் குழுவினரை சந்தித்து தனது பிரச்சாரத்தை திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தொடங்குகிறார். பின்னர், கோவனூர், செவலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், துளையானூர் மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

பின்னர், அறந்தாங்கி, நாகுடி, ஆவணத்தான்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார், நெடுவாசலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் மக்கள் சபைக் கூட்டம், வடகாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திலும் பேசுகிறார். ஆலங்குடியில் அன்று இரவு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். நாளை (ஜன.30) புதுக்கோட்டை, இச்சடி, சூரக்காடு, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை, கீழக்குறிச்சி, இலுப்பூர், விராலிமலையில் பிரச்சாரம் செய்து, கீரனூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி, கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x