Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
நாகப்பட்டினம்: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, ஷேக் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை, கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி தொடங்கி வைத்தார். இதில், மாநில துணைச் செயலாளர் முபாரக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, காவிரி பாதுகாப்பு கூட்டியக்கத் தலைவர் தனபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன், கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT