Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

கரூர் மண்மங்கலம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன

கரூர்

மண்மங்கலம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.29) கூடுதலாக புதிய மின்மாற்றி அமைக்கப்படுவதால், ஒத்தக்கடை மற்றும் குப்புச்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கரூர் கோட்ட பொறியாளர் சு.செந்தாமரை தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம். குப்புச்சிபாளையம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.

கும்பகோணம்

கும்பகோணம் நகர துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கும்பகோணம் நகரம், செட்டிமண்டபம், மேலக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரியத்தின் கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x