Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

ஏலகிரி மலையில் கைப்பந்து போட்டிகள்

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் கைப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் இல்லத்தந்தை ஜான் சந்தோசம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ததேயூஸ் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி நெறியாளர் சேவியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இதில், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்ட கைப்பேந்துபோட்டிகள் நடைபெற் றன. இதில், மங்கலம் அணி முதலி டத்தை பிடித்தது. இதையொட்டி, முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பை மங்கலம் அணிக்கு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த கெசு இளைஞர்கள் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

3-ம் இடம் பிடித்த எம்.கே.புதூர் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. 4-ம் இடம் பிடித்த பப்பாதுரையான் விடுதி அணிக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முடிவில், பேராசிரியர் சுரேஷ்ராஜன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x